புதுச்சேரியில் என்ன நடக்கிறது?

  • ஆளுநர் ஒரு பக்கம் நகர் வலம் வருகிறார்.
  • சபாநாயகர் அரசியலில் ஈடுபடுகிறார்.
  • சுயேட்சை எம் எல் ஏ க்கள், ஆளுநரை சந்திக்கின்றனர்.
  • முதல்வர் மவுனம் காக்கிறார்.
  • 12 வது கட்சி விழாவை கொண்டாடுகிறார்.
  • மத்திய உள்துறை மாநிலத்துக்கு நிதி குறைத்து தருகிறது.
  • ராஜ்யசபா உறுப்பினர் விமான நிலையம் செயல் படுத்த கேட்டு அறிக்கை விடுகிறார்.
  • பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அரசின் பதிலைக் காட்டி தப்பித்து விடுகிறார்.
  • எதிர்க்கட்சி திமுக தலைவர், கண்டண அறிக்கை மட்டுமே விடுகிறார்.
  • சில எம் எல் ஏ க்கள், ரோடு போடுவதை மிகப்பெரிய சாதனையாக காட்டுவதோடு பூமி பூஜை நிகழ்ச்சி நடக்கிறார்கள்.
  • ஆளும் கூட்டணி சட்ட மன்ற உறுப்பினர், புதுச்சேரியில் 30 சட்ட மன்ற உறுப்பினரில்  எவனும் வேலை செய்யல நான் மட்டும் தான் செய்யுறேன், என்று சகட்டு மேனிக்கு ஒரு பத்திரிகையாளரை மிரட்டுகிறார்.
  • இடையில் மத்திய அமைச்சர் வந்து பட்ஜெட் 2022 பற்றி,  சன்வே ஓட்டலில் விளம்பர தாரர் நிகழ்ச்சி நடத்தி விட்டு செல்கிறார்.
  • எதிர்கட்சிகள், சம்பந்தமே இல்லாமல், வழக்கம் போல தங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
  • மக்களும் இனம் புரியாமல் தவித்து வருகின்றனர்..

பகவத் கீதை சொன்னது போல்.

  • கடந்த ஆட்சி எப்படி நடந்ததோ.,
  • அப்படியே இந்த ஆட்சியும் நடக்கிறது,
  • கடந்த ஆட்சியில் என்ன அனுபவித்தார்களோ,
  • அதே துன்பங்களை துயரங்களை இந்த ஆட்சியிலும் அனுபவிப்பீர்கள்.
  • எது நடக்கிறதோ, அது மாறப் போவது இல்லை, நீங்கள் நினைக்கும் எந்த மாற்றமும் நிகழப் போவதும் இல்லை.
  • எல்லாம் உங்கள் விதிப்படி நடக்கிறது.
  • இதை மாற்ற நினைத்தால் கூட உன்னால் முடியாது.
  • உன்னை அவர்களிடம் விற்று விட்டாய்.
  • அவர்கள் உன்னை விலைக்கு வாங்கி விட்டார்கள்.

இனிவரும் காலங்களில் ஆவது உன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்ற, உன்னை விற்காமல் பார்த்துக் கொள், எல்லாம் நன்றாகவே நடக்கும்.

இப்படிக்கு.

கோ ராமலிங்கம்
மக்கள் கண்காணிப்பு குழு..
செல் 97895 45401..

பதிவு.

திரு. AAP. ஹமீது. MMY.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »